திருக்குறள்
அறத்துப்பால்
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 23
ஈகை
221. பரிசுப் பொருள்
அந்த அலுவலகத்தின் ஊழியர்களின் வீடுகளில் நடக்கும் விழாக்களுக்குப் பரிசுப் பொருள் வாங்கும் பொறுப்பு சந்திரனுடையது.
ஊழியர்கள் அனைவரும் தலைக்கு இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்படும். அதிகாரிகள், உதவியாளர்கள், கடைநிலை ஊழியர்கள் என்று பதவிக்குத் தகுந்தாற்போல் தொகை நிர்ணயிக்கப்படும்.எல்லோரும் தாங்கள் கொடுக்க வேண்டிய தொகையைச் சந்திரனிடம் கொடுத்து விடுவார்கள். மொத்தத் தொகையில் சந்திரன் ஒரு பரிசுப் பொருள் வாங்கி விடுவான்.
ஆனால், அந்த நிறுவனத்தின் பொது மேலாளரின் மகன் திருமணத்தின்போது, பெரும்பாலானோர் தனித் தனியே பரிசுப் பொருள் வாங்கிக் கொடுக்க விரும்பினர். நல்ல பரிசு வாங்கிக் கொடுத்துப் பொது மேலாளரை மகிழச் செய்ய வேண்டும் என்பது பலரின் எண்ணம். இதனால், பரிசுக்காக அதிகப் பணம் கொடுக்க முடியாத ஊழியர்களுக்கு சங்கடமான நிலை ஏற்பட்டது.
சில மாதங்களுக்குப், பிறகு கடைநிலை ஊழியர் ராஜுவின் கிருகப் பிரவேச விழா வந்தது. அதற்கு வழக்கமான முறையில் தொகை நிர்ணயிக்கப்பட்டது.
வசூலான மொத்தப் பணத்தில் என்ன பரிசு வாங்கலாம் என்று சந்திரன் யோசித்தான். எப்போதும் குறிப்பிட்ட சிலரைக் கலந்து கொண்டுதான் அவன் பரிசுத் தொகையைத் தீர்மானிப்பான் - அவர்கள் குறை கூறும் இயல்புள்ளவர்கள் என்பதால்! மற்றவர்கள் என்ன பரிசு என்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
ராஜுவின் கிருகப் பிரவேசத்துக்கு மொத்தம் 10000 ரூபாய் வசூலாகியிருந்தது. பரிசுப் பொருள் பற்றிப் பல்வேறு யோசனைகள் கூறப்பட்டன. இறுதியில், சந்திரன் ராஜுவிடம் கேட்டு, அவனிடம் இல்லாத, அவனுக்குப் பயன்படக் கூடிய ஒரு பொருளை வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
கிருகப் பிரவேசத்தன்று, சந்திரன் கையில் பரிசுப் பொருள் எதுவும் எடுத்து வராததை அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.
அனைவரும் ராஜூவைச் சென்று வாழ்த்தியபோது, சந்திரன் அவனிடம் ஒரு கவரைக் கொடுத்தான்.
வெளியில் வந்ததும், அனைவரும் சந்திரனைச் சூழ்ந்து கொண்டு, "கவர்ல என்ன இருந்தது?" என்று கேட்டனர்.
"இன்வர்ட்டருக்கான பில். அந்தக் கடைக்கு ராஜு ஃபோன் பண்ணினா, அவங்க இன்வர்ட்டரை அவன் வீட்டில கொண்டு வந்து வச்சு, கனெக்ஷன் கொடுத்துடுவாங்க. இன்வர்ட்டர் கனமா இருக்கும். கையில தூக்கிட்டு வர முடியாதுங்கறதாலதான் நான் வாங்கிட்டு வரலை" என்றான் சந்திரன்.
"இன்வர்ட்டரா?" என்றனர் பலரும்.
"ஆமாம். ராஜுகிட்ட பேசினேன். அவர்கிட்ட டிவி, ஃபிரிட்ஜ் மாதிரி பொருட்கள் எல்லாம் இருக்கு. 10,000 ரூபாய்க்கு உபயோகமான பொருள் எதையும் அவரால சொல்ல முடியல. இந்த ஏரியாவில் பவர்கட் அதிகம். ராஜுவோட ரெண்டு பிள்ளைகளும் ஸ்கூல்ல படிக்கறாங்க. அதனால இன்வர்ட்டர் இருந்தா அவருக்கு உபயோகமா இருக்கும்னு நினைச்சு, அவர்கிட்ட கேட்டேன். அவரும் சரின்னாரு. அதான் இன்வர்ட்டர் வாங்கிட்டேன்."
"ஆனா, இன்வர்ட்டர் விலை அதிகமா இருக்குமே!"
"ஆமாம். நல்ல இன்வர்ட்டர் 18,000 ரூபாய்க்குத்தான் கிடைச்சது."
"அப்ப, மீதி 8,000 ரூபாய்?"
"நான் போட்டுத்தான் வாங்கினேன்."
"எதுக்கு? 10,000 ரூபாயில் ஏதாவது வாங்கியிருக்க வேண்டியதுதானே?" என்றார் ஒரு மூத்த அதிகாரி.
"தப்பா நினைச்சுக்காதீங்க. இங்க ஜி.எம். இல்ல. அதனால சொல்றேன். ஜி.எம். வசதியானவர். ஆனா, அவர் வீட்டுக் கல்யாணத்துக்கு ஒவ்வொத்தரும் ஆயிரம், ரெண்டாயிரம்னு செலவு செஞ்சு பரிசுப் பொருள்கள் வாங்கிக் கொடுத்தோம். ஆனா வசதிக்குறைவான ராஜு வீட்டு விழாவுக்கு, நூறு, இருநூறுக்கு மேல கொடுக்க நமக்கு மனசில்லை. 10000 ரூபாய்க்கு ராஜூவுக்குப் பயன்படாத ஏதாவது ஒரு ஆடம்பரப் பொருளை வாங்கிக் கொடுக்கறதுக்கு பதிலா, பயனுள்ளதா ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம்னு நினைச்சேன். உங்ககிட்ட மறுபடி அதிகத் தொகை கேட்டு வசூலிக்க எனக்கு விருப்பமில்லை. அதனாலதான், நான் பணம் போட்டேன். எப்பவாவது ஒரு தடவை செய்யறதுதானே இது? இப்ப நீங்க கேட்டதால, இதை உங்ககிட்ட சொல்ல வேண்டி ஆயிடுச்சு. தப்பா நினைச்சுக்காதீங்க" என்று விளக்கினான் சந்திரன்.
10,000 ரூபாயில் ஏதாவது வாங்கியிருக்க வேண்டியதுதானே என்று சொன்ன மூத்த அதிகாரி, "கிரேட் ஜாப், சந்திரன். நான் இன்னொரு ஐநூறு ரூபா கொடுக்கறேன்" என்று பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார்.
அவரைத் தொடர்ந்து இன்னும் பலரும், நூறு ரூபாய், இருநூறு ரூபாய், ஐநூறு ரூபாய் என்று கொடுத்தார்கள்."
"இருங்க. இப்படிக் கொடுத்தா, நான் எப்படிக் கணக்கு வச்சுக்கறது? கொடுக்க விரும்பறவங்க ஆஃபீஸ்ல வந்து கொடுங்க. ஒரு நோட்டில கணக்கு எழுதிக்கறேன்" என்றான் சந்திரன்.
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
பொருள்:
இல்லாதவர்களுக்குக் கொடுப்பதுதான் ஈகை. மற்றவை பலனை எதிர்பார்த்துச் செய்யப்படுபவை.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
222. கோதானம்
தன் அம்மாவின் இறப்புக்குப் பின் செய்ய வேண்டிய இறுதி நாள் சடங்குகளைச் செய்து கொண்டிருந்தான் குரு.
"இப்ப நீங்க சில தானங்கள் செய்யணும். அந்தக் காலத்தில, பசு, பொன் மாதிரி பொருட்களை தானம் பண்ணுவா. இப்ப அதெல்லாம் சரியா வராது. அதனால. பணமாவே கொடுக்கலாம். ஒவ்வொரு தானமா பேர் சொல்றேன். அதுக்குத் தகுந்தாப்பல, நூறு, ஐநூறு, ஆயிரம், ரெண்டாயிரம்னு நீங்க கொடுக்கலாம்" என்றார் புரோகிதர்.
குரு தலையாட்டினான். தானமாகக் கொடுக்க வேண்டிய பொருட்களின் பெயர்களை புரோகிதர் ஒவ்வொன்றாகச் சொல்ல, சடங்குக்கு வந்திருந்தவர்களில் ஒவ்வொருவராக அழைத்து, கொடுக்கப்பட வேண்டிய பொருளின் மதிப்புக்கேற்ப, ஐம்பது ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் வரை அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டு வந்தான் குரு.
"இப்ப கோதானம், அதாவது பசு தானம். உங்க சொந்தக்காரங்களிலேயே யாராவது ஏழையா இருக்கறவாளுக்குக் கொடுக்கலாம். எவ்வளவு கொடுக்கப் போறேள்?" என்றார் புரோகிதர், குருவுக்கு மட்டும் கேட்கும்படி.
"என் மனைவியோட தம்பிக்குக் கொடுக்கலாமா?" என்றான் குரு, புரோகிதரின் காதில்.
"பேஷாக் குடுக்கலாம். உங்க தம்பிக்குத்தான் கொடுக்கக் கூடாது! வேற யாராவது ஏழைகளுக்குக் கொடுக்கறதுன்னாலும் கொடுக்கலாம்" என்றார் புரோகிதர்.
"என் மைத்துனன் ரொம்பக் கஷ்டப்படறான். கோதானம்கறதால, ஐயாயிரம் ரூபா கொடுக்கலாம்னு இருக்கேன். அது அவனுக்கு உதவியா இருக்கும்."
"சரி. உங்க விருப்பப்படியே செய்யுங்கோ. அவரைக் கூப்பிடுங்கோ."
"பாலு!" என்று அழைத்தான் குரு.
முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு இளைஞன் எழுந்து வந்தான்.
குரு அருகிலிருந்த பணப்பையிலிருந்து ஐயாயிரம் ரூபாயை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டான்.
"கோதானத்தை உங்களுக்குக் கொடுக்கணும்னு பிரியப்படறார். வாங்கிக்கோங்கோ" என்றார் புரோகிதர்.
"மன்னிச்சுக்கங்க. நான் தானம் வாங்கறதில்ல" என்றான் பாலு, புரோகிதர், குரு இருவரையும் பார்த்தபடி.
"வாங்கிக்கோப்பா. இது என் அம்மாவுக்காக செய்யறதுதானே?" என்றான் குரு.
"உங்க அம்மாவுக்காக நான் வேற ஏதாவது செய்யணும்னா சொல்லுங்க, சந்தோஷமா செய்யறேன். தானம் எதுவும் வாங்கக் கூடாதுங்கறது என்னோட கொள்கை" என்றான் பாலு.
"இது மாதிரி யாராவது தானம் கொடுத்தா, அதை வாங்கிக்கறது புண்யம். அதனால சொர்க்கம் கிடைக்கும்" என்றார் புரோகிதர்.
"எனக்கு சொர்க்கம் கிடைக்காதுன்னா பரவாயில்ல. தானம் வாங்கிக்காததால ஏதாவது பாவம் வரும்னா, அந்தப் பாவத்தையும் நான் ஏத்துக்கறேன்" என்றான் பாலு, பிடிவாதமாக.
"வேண்டாம்னா விட்டுடுங்க. அவனை ஏன் வற்புறுத்தறீங்க?" என்றாள் குருவின் மனைவி மாலா.
"சரி. வேற யாருக்காவது கொடுத்துடுங்கோ" என்றார் புரோகிதர். உட்கார்ந்திருந்தவர்களில் ஒருவரை அவர் கைகாட்ட, அவர் எழுந்து வந்தார்.
"வேற யாராவதுன்னா, ஐநூறு, ஆயிரம்தான் கொடுத்திருப்பேன்" என்று முணுமுணுத்தபடியே, கையில் வைத்திருந்த ஐயாயிரம் ரூபாயை அவரிடம் கொடுத்தான் குரு.
சற்று நேரம் கழித்து, சுமங்கலிகளுக்குப் புடவை தானம் நடந்தது. பத்து பேருக்கு விலை உயர்ந்த புடவைகளை தானமாகக் கொடுத்துக் கொண்டிருந்தாள் மாலா.
கடைசியாக வந்த பெண்மணியைப் பார்த்து, புரோகிதர், "இருங்கோ! நீங்க சுமங்கலியா?" என்றார், அவள் வெறும் கழுத்தையும் நெற்றியையும் பார்த்து விட்டு.
அந்தப் பெண் இல்லையென்று தலையாட்டினாள். பிறகு, "எங்கிட்ட கட்டிக்க நல்ல புடவை இல்ல. அதான் வந்தேன்" என்றாள்.
மாலா அவளிடம் ஒரு புடவையைக் கொடுக்க வந்தாள்.
"இருங்கோ. சுமங்கலி அல்லாதவாளுக்குக் கொடுக்கக் கூடாது. கொடுத்தா, உங்களுக்குப் பாவம்தான் வந்து சேரும்" என்றார் புரோகிதர்.
"பரவாயில்லை" என்றபடியே புடவையைக் கொடுத்தாள் மாலா.
"வந்து வாய்ச்சிருக்கீங்க பாருங்க அக்காவும், தம்பியும் ஒரே மாதிரியா!" என்று முணுமுணுத்தான் குரு.
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.
பொருள்:
பிறர் கொடுக்கும் பொருளைப் பெற்றுக் கொள்வது (மேலுலகம் செல்ல) நல்வழி என்ற நிலையிலும், கொடையைப் பெற்றுக் கொள்வது தீயது. கொடை அளிப்பதால் ஒருவர் மேலுலகத்தை இழக்க நேரிடும் என்ற நிலையிலும், கொடை வழங்குவதே சிறந்தது.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
"ஏண்டா, இன்னும் கொஞ்சம் அதிகமா மார்க் வாங்கி இருக்கக்கூடாது? கவர்ன்மென்ட் எஞ்சினீரிங் காலேஜில் இடம் கிடைச்சிருக்குமே!" என்றான் சாம்பசிவம், தன் மகன் குணசீலனிடம்.
குணசீலன் பதில் சொல்லவில்லை.
சாம்பசிவத்தின் மனைவி நீலா மகனுக்குப் பரிந்து கொண்டு வந்தாள். "நடந்ததைப் பத்திப் பேசி என்ன ஆகப் போகுது? நடக்க வேண்டியதைப் பத்திப் பேசுங்க."
"பேசறதுக்கு என்ன இருக்கு? வருஷத்துக்கு ஒண்ணரை லட்சம் ரூபா அவன் படிப்புக்குச் செலவழிக்கற நிலைமையில நான் இல்ல" என்றான் சாம்பசிவம்.
"அப்ப, அவனை அம்போன்னு விட்டுடப் போறீங்களா? எஜுகேஷன் லோன் ஏதாவது கிடைக்குமான்னு பாருங்க."
சாம்பசிவம் யோசித்தான்.
நான்கு வருடங்கள் ஓடியதே தெரியவில்லை. குணசீலனின் படிப்பு முடிந்து, அவனுக்கு எஞ்சினீரிங் பட்டம் கிடைத்து விட்டது. காம்பஸ் இன்டர்வியூவில் நல்ல வேலையும் கிடைத்து விட்டது. ஓரிரு மாதங்களில் வேலையில் சேர வேண்டியிருக்கும் என்று சொன்னார்கள்.
"நாலு வருஷமா யாரோ ஒரு நண்பர் கிட்ட கடன் வாங்கிப் படிக்க வச்சதா சொன்னீங்களே தவிர, அது யாருன்னு சொல்லலியே? எனக்குத் தெரியாத அந்த நண்பர் யாரு? பள்ளிக்கூடத்துல உங்களோட படிச்சவர்னு சொன்னீங்களே தவிர, அவர் பேரைக் கூடச் சொல்லலியே!" என்றாள் நீலா.
"இப்ப சொல்றேன்" என்ற சாம்பசிவம், தன் மகனிடம் திரும்பி, "குணசீலா! இந்தக் கடனுக்கு வட்டி கிடையாது. அசலை மட்டும் மாசா மாசம் உன் சம்பளத்திலேந்து கொடுத்துடணும். உன் சொந்தச் செலவுக்கு வேண்டியது போக மீதியைக் கடனுக்குக் கொடுத்துடு. குடும்பச் செலவுக்கு என் சம்பளப் பணம் போதும். ரெண்டு மூணு வருஷத்திலே கடனை அடைச்சிடணும், சரியா?" என்றான்.
"கண்டிப்பா செய்யறேன் அப்பா. சம்பளம் வாங்கின அன்னிக்கே ஆன்லைன் டிரான்ஸ்ஃபர் பண்ணிடறேன். ஆனா ,அந்த நல்ல மனுஷர் யார்னு சொல்லுங்க" என்றான் குணசீலன்.
"உன் அண்ணன் சிவகுமார்தான் பணம் கொடுத்து உதவினார்" என்றான் சாம்பசிவம், நீலாவிடம்.
"அது எப்படிங்க..." என்றாள் நீலா, நம்ப முடியாதவளாக.
"குணசீலன் படிப்புக்காக என் ஆஃபீஸ்ல கடன் கேட்டேன். இல்லேன்னுட்டாங்க. பாங்க்ல எஜுகேஷன் லோன் கேட்டப்ப, இல்லேன்னு வெளிப்படையா சொல்லாம, இழுத்தடிச்சாங்க. அப்புறம்தான் உன் அண்ணன் ஞாபகம் வந்தது.
"அவர் வேற ஜாதியில் கல்யாணம் செஞ்சுக்கிட்டார்னு உங்க வீட்டில அவரோட உறவை வெட்டி விட்டுட்டீங்க. நம்ம கல்யாணத்துக்குக் கூட அவரைக் கூப்பிடல. நான் அவரைப் பாத்தது கூட இல்ல. அவர் வசதியா இருக்கார்னு நீ சொல்லி இருக்க.
"அவரைப் பாத்து என்னை அறிமுகப்படுத்திக்கிட்டு உதவி கேட்டேன். அவர் உடனே சரின்னு சொல்லிட்டார். நான் முதல் வருஷப் படிப்புச் செலவுக்கு மட்டும்தான் பணம் கேட்டேன், அடுத்த வருஷங்களுக்கெல்லாம், வேற எங்கேயாவது முயற்சி பண்ணலாம்னுட்டு. அவர்தான் நாலு வருஷத்துக்கும் தானே பணம் கொடுக்கறதாச் சொன்னார். வட்டி வேண்டாம், அசலை மட்டும், நம் பையன் அவன் சம்பளத்திலேந்து கொஞ்ச கொஞ்சமாத் திருப்பிக் கொடுத்தா போதும்னுட்டாரு. ஒரே ஒரு நிபந்தனைதான் போட்டாரு."
"என்ன நிபந்தனை?"
"அவர் பணம் கொடுத்ததை நான் யார்கிட்டயும் சொல்லக் கூடாது - உன்கிட்டயும், குணசீலன்கிட்டயும் கூட. அவரும் யார்கிட்டயும் சொல்ல மாட்டாரு."
"ஏன் அப்படி?"
"அவர் சொன்னாரு: 'மாப்பிள்ளை, உங்ககிட்ட உங்க பையனைப் படிக்க வைக்கப் பணம் இல்ல, எங்கிட்ட கடன் வாங்கித்தான் படிக்க வச்சீங்கன்னு எதுக்கு நாலு பேருக்குத் தெரியணும்? உங்களுக்கும் எனக்கும் மட்டும் தெரிஞ்சா போதாதா?' அப்படின்னு. எப்படிப்பட்ட மனுஷன் பாத்தியா?" என்றான் சாம்பசிவம்.
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள
பொருள்:
ஒருவரிடம் பொருள் இல்லை என்பதைப் பிறரிடம் கூறாமல், அவனுக்குக் கொடுப்பது நல்ல குடியில் பிறந்தோரின் செயல்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
224. கவலைக்குக் காரணம்
"ஏன் காலையிலேந்து ஒரு மாதிரி இருக்கீங்க?" என்றாள் செண்பகம்.
"ஒண்ணுமில்லை" என்றார் கமலநாதன்.
"வாக்கிங் போறச்சே நல்லாதானே இருந்தீங்க? திரும்பி வரச்சே முகம் வாடி இருந்தது. ரொம்ப நடந்து சோர்வாயிட்டீங்களோன்னு நினைச்சேன். ஆனா, இவ்வளவு நேரம் ஆகியும் முகத்தில தெளிவு வரலே. அதுதான் கேட்டேன்"
கமலநாதன் பதில் சொல்லவில்லை. ஆனால், மனதுக்குள் மனைவியின் நுணுக்கமான கவனத்தை வியந்தார்.
வழக்கமாக ஒன்பது மணிக்கு அலுவலகம் கிளம்பும் கமலநாதன், அன்று கிளம்பவில்லை.
"என்னங்க, ஆஃபீஸ் போகலையா? உடம்பு சரியில்லையா?" என்றாள் செண்பகம்.
"இல்ல. இன்னிக்குக் கொஞ்சம் லேட்டா போகப் போறேன்" என்றார் கமலநாதன்.
அதற்குப் பிறகு, செண்பகம் எதுவும் பேசவில்லை.
ஒன்பதே முக்கால் மணிக்கு வீட்டை வீட்டுக் கிளம்பிய கமலநாதன், "பாங்க்குக்குப் போயிட்டு வரேன். வந்ததும் ஆஃபீசுக்குக் கிளம்பிடுவேன்" என்று சொல்லி விட்டுப் போனார்.
பதினோரு மணிக்குக் கமலநாதன் வீட்டுக்குத் திரும்பியதும், செண்பகம் அவரிடம் கேட்டாள். "இப்ப உங்க முகம் பிரகாசமா இருக்கு. பாங்க்குக்கு ஒரு மைல் தூரம் நடந்து போயிட்டு வந்த களைப்பு கூட இல்லை."
கமலநாதன் சிரித்தார்.
"அப்பா! காலையிலேந்து முதல் தடவையா முகத்தில சிரிப்பு வந்திருக்கு! என்ன விஷயம்னு சொல்லுங்களேன்" என்றாள் செண்பகம்.
"காலையில வாக்கிங் போகச்சே, வழியில சீதாராமனைப் பாத்தேன். ரொம்ப சோர்வா இருந்தாரு. என்னன்னு கேட்டதுக்கு, அழுதுட்டாரு. அவர் மனைவி நகைகளை அடகு வச்சு கடன் வாங்கி இருக்காரு. அசலும், வட்டியும் கட்ட முடியாம, அவர் நகைகள் முழுகப் போற நிலையில இருக்காம். இன்னிக்குள்ள இருபதாயிரம் ரூபாய் கட்டணுமாம். நிறைய இடத்தில கேட்டும் அவருக்குப் பணம் கிடைக்கலியாம். அடகுக் கடைக்காரன் நகைகளை ஏலம் விட்டா, பாதி விலைக்குக் கூடப் போகாதாம். நகையெல்லாம் போயிடுச்சுன்னா, இப்ப இருக்கற விலையில, பொண்ணு கல்யாணத்துக்குப் புது நகை வாங்க முடியுமான்னு அழுதாரு."
"அதான் பாங்க்குக்குப் போய் பணம் எடுத்து அவருக்குக் கொடுத்துட்டு வந்தீங்களாக்கும்!" என்றாள் செண்பகம்.
"உனக்கு எப்படித் தெரியும்?"
"உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா?"
"வெளிநாட்டில எல்லாம், எப்ப வேணும்னாலும் ஏ டி எம்ல போய்ப் பணம் எடுத்துக்கற வசதி இருக்கு. நம் நாட்டில அது வர, இன்னும் பத்து வருஷமாவது ஆகும்" என்றார் கமலநாதன்.
"அது சரி. அதுக்கு ஏன் இவ்வளவு நேரம் வருத்தமா இருந்தீங்க?"
"காலையில சீதாராமன் எங்கிட்ட அவர் கஷ்டத்தைச் சொல்லி அழுததும், அவருக்காக வருத்தப்பட்டேன். பாங்க்ல பணம் எடுத்து அவர் கிட்ட கொடுத்ததும், அவர் முகத்தில வந்த சந்தோஷத்தைப் பாத்ததும்தான் என்னோட வருத்தம் போச்சு. அது என் முகத்தில உனக்குத் தெரிஞ்சிருக்கு போலருக்கு" என்றார் கமலநாதன், சிரித்தபடி.
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.
பொருள்:
நம்மிடம் உதவி கேட்பவரின் நிலை கண்டு நம் மனதில் ஏற்படும் வருத்தம், அவருக்கு நாம் உதவி செய்தபின் அவர் முகத்தில் தோன்றும் மலர்ச்சியைக் கண்டதும் நீங்கி விடும்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
225. அழையா விருந்தாளி
பிரசன்ன பார்க்கவர் மெல்ல எழுந்தார். பத்து நாள் பட்டினி கிடந்த உடல், சோர்வினால் நிற்க முடியாமல் தள்ளாடியது.
பிரசன்ன பார்க்கவர் ஒரு காலைத் தூக்கி மடக்கி, மறு காலின் முழங்காலுக்குப் பக்கவாட்டில் வைத்து அழுத்தியபடி, இரு கைகளையும் மேலே தூக்கிக் குவித்தபடி, விருட்சாஸனத்தில் நின்றார். முதலில் தள்ளாட்டம் அதிகமானது போல் தோன்றினாலும், சில வினாடிகளில் உடல் நிலை பெற்று அசையாமல் நின்றது.
இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, இயல்பு நிலைக்கு வந்து, மெல்ல நடக்க ஆரம்பித்தார் அவர். சற்றுத் தொலைவு நடந்து ஊருக்குள் வந்ததும், வாசலில் ஐந்தாறு பேர் நின்று கொண்டிருந்த ஒரு வீட்டை நோக்கி நடந்தார்.
வீட்டின் தாழ்வாரத்தில் இலை போடப்பட்டு, சிலர் சாப்பிட அமர்ந்திருந்தது வாசலிலிருந்து தெரிந்தது. உள்ளே சென்று, ஒரு ஓரத்தில் காலியாயிருந்த இடத்தில் அமர்ந்தார்.
சாப்பிட்டு விட்டு வெளியே வந்து தெருவில் இறங்கியதும், சற்றுத் தொலைவிலிருந்து பரபரப்பாக ஒடி வந்த ஒருவர், "சாமி" என்று கூவியபடி, பிரசன்ன பார்க்கவரின் காலில் விழப் போனார்.
அவரைத் தடுத்த பிரசன்ன பார்க்கவர், "நீங்கள் என்னை விடப் பெரியவர். நீங்கள் என் காலில் விழக் கூடாது" என்றார்.
"நான் வயசில பெரியவனா இருக்கலாம். ஆனா, நீங்க ஒரு முனிவர். எத்தனையோ நாள் பசி, தூக்கம் இல்லாம தவம் இருந்திருக்கீங்க. பத்து நாளா நீங்க சாப்பிடாம, இருந்த இடத்தை விட்டு அசையாம தவம் இருந்தீங்களே, அதுக்கு எவ்வளவு மன வலிமை வேணும்! அதனால, நீங்க என்னை விடப் பல விதத்திலும் பெரியவர். நீங்க என் வீட்டுக்கு வருவீங்கன்னு நான் எதிர்பாக்கல. நான் பக்கத்தில கடைக்குப் போயிருந்தேன். நீங்க வந்து சாப்பிட்டுக்கிட்டிருக்கிறதா ஒத்தர் வந்து சொன்னதும், ஓடி வந்தேன். நீங்க என் வீட்டில வந்து சாப்பிட்டது என்னோட புண்ணியம்" என்றார் அவர்.
"நீங்க வயசில பெரியவர்ங்கறதுக்காக நான் அப்படிச் சொல்லல. பசியைப் பொறுத்துக்கறதை விட, பசிச்சவங்களுக்குச் சோறு போடறது பெரிய தவம். அதை நீங்க செய்யறீங்க. தினம் பட்டினியா இருக்கற சில பேரைத் தேடிப் பிடிச்சு உங்க வீட்டுக்கு அழைச்சுட்டு வந்து சாப்பாடு போடறீங்க. உங்களைப் பத்தி நான் கேள்விப்பட்டிருக்கேன். நீங்க அவ்வளவு வசதியானவர் இல்லேன்னும், ஒரு தவம் மாதிரி இதை செஞ்சுக்கிட்டு வரீங்கன்னும் எனக்குத் தெரியும். பத்து நாள் உபவாசம் முடிஞ்சப்பறம், ஒரு உயர்ந்த மனிதர் வீட்டில சாப்பிடணும்னு நினைச்சுத்தான், உங்க வீட்டுக்கு அழையா விருந்தாளியா வந்தேன்" என்றார் பிரசன்ன பார்க்கவர், சிரித்தபடி.
மாற்றுவார் ஆற்றலின் பின்.
பொருள்:
தவ வலிமையினால் பசியைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றல் பெரிதுதான். ஆனால் பசியால் வாடுபவர்க்கு உணவளித்து, பசியைப் போக்குபவரின் ஆற்றல் இன்னும் மேன்மை பொருந்தியது.
இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, இயல்பு நிலைக்கு வந்து, மெல்ல நடக்க ஆரம்பித்தார் அவர். சற்றுத் தொலைவு நடந்து ஊருக்குள் வந்ததும், வாசலில் ஐந்தாறு பேர் நின்று கொண்டிருந்த ஒரு வீட்டை நோக்கி நடந்தார்.
வீட்டின் தாழ்வாரத்தில் இலை போடப்பட்டு, சிலர் சாப்பிட அமர்ந்திருந்தது வாசலிலிருந்து தெரிந்தது. உள்ளே சென்று, ஒரு ஓரத்தில் காலியாயிருந்த இடத்தில் அமர்ந்தார்.
சாப்பிட்டு விட்டு வெளியே வந்து தெருவில் இறங்கியதும், சற்றுத் தொலைவிலிருந்து பரபரப்பாக ஒடி வந்த ஒருவர், "சாமி" என்று கூவியபடி, பிரசன்ன பார்க்கவரின் காலில் விழப் போனார்.
அவரைத் தடுத்த பிரசன்ன பார்க்கவர், "நீங்கள் என்னை விடப் பெரியவர். நீங்கள் என் காலில் விழக் கூடாது" என்றார்.
"நான் வயசில பெரியவனா இருக்கலாம். ஆனா, நீங்க ஒரு முனிவர். எத்தனையோ நாள் பசி, தூக்கம் இல்லாம தவம் இருந்திருக்கீங்க. பத்து நாளா நீங்க சாப்பிடாம, இருந்த இடத்தை விட்டு அசையாம தவம் இருந்தீங்களே, அதுக்கு எவ்வளவு மன வலிமை வேணும்! அதனால, நீங்க என்னை விடப் பல விதத்திலும் பெரியவர். நீங்க என் வீட்டுக்கு வருவீங்கன்னு நான் எதிர்பாக்கல. நான் பக்கத்தில கடைக்குப் போயிருந்தேன். நீங்க வந்து சாப்பிட்டுக்கிட்டிருக்கிறதா ஒத்தர் வந்து சொன்னதும், ஓடி வந்தேன். நீங்க என் வீட்டில வந்து சாப்பிட்டது என்னோட புண்ணியம்" என்றார் அவர்.
"நீங்க வயசில பெரியவர்ங்கறதுக்காக நான் அப்படிச் சொல்லல. பசியைப் பொறுத்துக்கறதை விட, பசிச்சவங்களுக்குச் சோறு போடறது பெரிய தவம். அதை நீங்க செய்யறீங்க. தினம் பட்டினியா இருக்கற சில பேரைத் தேடிப் பிடிச்சு உங்க வீட்டுக்கு அழைச்சுட்டு வந்து சாப்பாடு போடறீங்க. உங்களைப் பத்தி நான் கேள்விப்பட்டிருக்கேன். நீங்க அவ்வளவு வசதியானவர் இல்லேன்னும், ஒரு தவம் மாதிரி இதை செஞ்சுக்கிட்டு வரீங்கன்னும் எனக்குத் தெரியும். பத்து நாள் உபவாசம் முடிஞ்சப்பறம், ஒரு உயர்ந்த மனிதர் வீட்டில சாப்பிடணும்னு நினைச்சுத்தான், உங்க வீட்டுக்கு அழையா விருந்தாளியா வந்தேன்" என்றார் பிரசன்ன பார்க்கவர், சிரித்தபடி.
குறள் 225
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியைமாற்றுவார் ஆற்றலின் பின்.
பொருள்:
தவ வலிமையினால் பசியைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றல் பெரிதுதான். ஆனால் பசியால் வாடுபவர்க்கு உணவளித்து, பசியைப் போக்குபவரின் ஆற்றல் இன்னும் மேன்மை பொருந்தியது.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
226. ஐந்து லட்சம்
"ரிடையர் ஆனப்பறம் ரொம்ப பயமா இருக்கு" என்றார் சபாபதி.
"என்ன பயம்?" என்றார் தனபால்.
"பி எஃப், கிராச்சுவிட்டி பணத்தையெல்லாம் எதில முதலீடு செய்யறதுன்னே தெரியல. பாங்க்ல போட்டா, வட்டி கம்மியாதான் வரும். வேற எதிலேயாவது முதலீடு செஞ்சா ரிஸ்க் அதிகம்."
"இப்பல்லாம் பாங்க் கூட ரிஸ்க் ஆகிக்கிட்டு வருது. பேசாம ரிஸ்க் எடுத்து, மியூச்சவல் ஃபண்ட்ல கொஞ்சம், ஷேர் மார்க்கெட்ல கொஞ்சம் போடலாம்னு பாக்கறேன்" என்றார் சண்முகம்.
"என் பையன் எனக்கு வந்த அம்பது லட்சத்தையும் வாங்கி அவன் பிஸினஸ்ல போட்டுட்டான். வருஷா வருஷம் லாபத்தில் பங்கு தரேன்னு சொல்லியிருக்கான். இருபது பர்சென்ட்டுக்கு மேல ரிட்டர்ன் வரும்னு சொல்றான். பணத்தைக் கொடுத்துட்டு பக் பக்னு உக்காந்திருக்கேன். அவன் பிசினஸ் எப்படிப் போகுதுன்னு கூடத் தெரியல. வருஷம் முடிஞ்சதும் ரிட்டர்ன் வருமான்னு தெரியல. அதுக்கப்பறம் எல்லா வருஷமும் தொடர்ந்து வருமானம் வருமான்னும் தெரியல" என்று புலம்பினார் நடராஜன்.
"ஏன் எல்லாப் பணத்தையும் பையனோட பிஸினஸுக்குக் கொடுத்தீங்க? பாதிப் பணத்தையாவது பாங்க்ல போட்டிருக்கலாமே!" என்றார் தனபால்.
"பணத்தை நாலு பங்காப் பிரிக்கணும். ஒரு பங்கை பாங்க்ல போடணும். ஒரு பங்குல நகை வாங்கி வச்சுக்கணும். ஒரு பங்கை ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்ட்ல போடணும். ஒரு பங்கில எங்கேயாவது நிலம் வாங்கிப் போடணும்" என்றார் ராமலிங்கம்.
"நீங்க அப்படித்தான் செஞ்சீங்களா?" என்று கேட்டார் சபாபதி
"இல்ல. ஏதோ அந்த நேரத்தில தோணின மாதிரி செஞ்சேன். இப்படிச் செஞ்சிருந்தா நல்லா இருக்கும்னு அப்புறம் தோணிச்சு" என்றார் ராமலிங்கம்.
"நாமெல்லாம் பேசிக்கிட்டிருக்கோம். வீரராகவன் எதுவுமே சொல்ல மாட்டேங்கறாரே!" என்றார் தனபால்.
"எனக்கு அம்பது லட்ச ரூபா வந்தது. அதில பத்து சதவீதம், அதாவது அஞ்சு லட்சத்தைத் தனியா எடுத்து வச்சுட்டு, மீதி நாப்பத்தஞ்சு லட்சத்தை, என் பையன் கிட்ட சொல்லி முதலீடு செய்யச் சொன்னேன். அவன் பாங்க்ல வேலை செய்யறானே! அவன் ரெண்டு மூணு வகையில என் பேர்ல முதலீடு செஞ்சிருக்கான். ஏதோ வருமானம் வந்துக்கிட்டிருக்கு. ஆனா எத்தனை சதவீதம் வருது, அதிகமா, குறைவான்னெல்லாம் நான் கணக்குப் பாக்கல" என்றார் வீரராகவன்.
"சரி. தனியா எடுத்து வச்ச அஞ்சு லட்சத்தை என்ன செஞ்சீங்க?" என்று கேட்டார் சண்முகம்.
"அதைத் தனியா பாங்க்ல டெபாசிட் பண்ணி இருக்கேன். அதிலேந்து வர வருமானத்தை அன்னதானம் பண்றவங்களுக்கு, அநாதை இல்லங்களுக்கு, முதியோர் இல்லங்களுக்குன்னு கொடுத்துக்கிட்டு வரேன்" என்றார் வீரராகவன்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
பொருள்:
வறியவர்களின் கொடிய பசியைத் தீர்ப்பதே ஒருவன் தான் பெற்ற பொருளைச் சேமித்து வைக்கும் இடமாகும்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
227. மூன்று அடுக்கு டிஃபன் காரியர்
"ரகு! இன்னிக்கு என்ன அயிட்டம் உன் லஞ்ச் பாக்ஸ்ல?' என்று கேட்டுக் கொண்டே வந்தான் குமார்.
"சாம்பார் சாதம்" என்று ரகு சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவன் டப்பாவைத் திறந்து, ஸ்பூனால் கொஞ்சம் சாம்பார் சாதத்தை எடுத்துத் தன் டிஃபன் பாக்ஸ் மூடியில் போட்டுக் கொண்ட குமார், "நம்ம ஆஃபீஸ்லேயே மத்தவங்களுக்குக் கொடுக்கறதுக்காக ஒரு எக்ஸ்டரா டப்பா எடுத்துக்கிட்டு வரவன் நீ ஒத்தன்தான்!" என்றான்.
"ஆனா, மத்தவங்ககிட்டேந்து எதுவும் வாங்கிக்க மாட்டான். அவன் கொண்டு வரதில, அவன் சாப்பிடறது கொஞ்சம்தான். அவன் மனைவி பாவம், நமக்கு செஞ்சு கொடுத்தனுப்பறாங்க!" என்ற கதிரேசன், தானும் ஒரு ஸ்பூன் சாம்பார் சாதம் எடுத்துக் கொண்டான்.
"எல்லாரும் ஆஃபீசுக்கு டிஃபன் பாக்ஸ்தான் எடுத்துக்கிட்டுப் போவாங்க. நீங்க மூணு டப்பா வச்ச காரியர் எடுத்துக்கிட்டுப் போறீங்க - அதுவும் மூணு பாத்திரத்திலேயும் ஒரே அயிட்டத்தை வச்சு! நீங்க சாப்பிடறது ரொம்ப கம்மி. எதுக்கு இவ்வளவு எடுத்துக்கிட்டுப் போறீங்க?"
திருமணம் ஆன புதிதில் சுகந்தி கேட்டதற்கு, "மத்தியானம் பசிக்கும்! அதனால நிறைய சாப்பிடுவேன்" என்றான் ரகு, சிரித்தபடி.
ஆனால், ரகு சாப்பிடுவது ஒரு டப்பாவில் பாதிதான் இருக்கும். ஒரு டப்பாவை அப்படியே பியூன் சண்முகத்திடம் கொடுத்து விடுவான் ரகு. சண்முகம் அலுவலகத்துக்குச் சாப்பாடு எடுத்து வருவதில்லை, டீயைக் குடித்து வயிற்றை நிரப்பிக் கொள்வான் என்பது ரகுவுக்குத் தெரியும்.
முதலில் ரகுவிடமிருந்து தினமும் சாப்பாடு வாங்கிக் கொள்ள சண்முகம் கொஞ்சம் சங்கடப்பட்டாலும், நாளடைவில் அவன் அதை ஏற்றுக் கொண்டு விட்டான்.
முதலில் ரகுவிடமிருந்து தினமும் சாப்பாடு வாங்கிக் கொள்ள சண்முகம் கொஞ்சம் சங்கடப்பட்டாலும், நாளடைவில் அவன் அதை ஏற்றுக் கொண்டு விட்டான்.
சில நாட்கள் உரிமையுடன் ரகுவிடம் வந்து, "என் டப்பாவைக் கொடுத்துடுங்க சார்! நான் இன்னிக்கு சீக்கிரம் சாப்பிட்டுட்டு, ஆஃபீஸ் வேலையா வெளியே போகணும்" என்பான் சண்முகம்!
ரகுவின் குணம் தெரிந்து, சுகந்தியும் உற்சாகமாக விதம் விதமாக உணவு செய்து கொடுக்க ஆரம்பித்தாள்.
அன்று ரகுவும், சுகந்தியும் பக்கத்து ஊரில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்குப் போயிருந்தனர். திரும்பும்போது, அங்கேயே ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, பஸ்ஸில் தங்கள் ஊருக்குத் திரும்புவதாக திட்டம்.
அவர்கள் ஓட்டலுக்கு அருகே வந்தபோது, எல்லாக் கடைகளும் மூடப்பட்டுக் கொண்டிருந்தன.
என்ன விஷயம் என்று ரகு அங்கே ஒருவரை விசாரித்தபோது, "உங்களுக்கு விஷயம் தெரியாதா? தமிழ் உரிமைக் கட்சித் தலைவர் கந்தசாமி இறந்துட்டாராம். அவர் கட்சிக்காரங்க கடைகளை மூடச் சொல்லி கலாட்டா பண்ணிக்கிட்டிருக்காங்க. அதனாலதான், எல்லாரும் கடையை மூடறாங்க" என்றார் அவர். சில நிமிடங்களில் எல்லாக் கடைகளும், ஓட்டல்களும் மூடப்பட்டன.
ஊருக்குப் போய் விடலாம் என்று நினைத்து, பஸ் நிறுத்தத்துக்குப் போனபோது, பஸ் எதுவும் போகாது என்று சொல்லி விட்டார்கள்.
உறவினர் வீட்டுக்கே திரும்பிப் போய், அங்கே இரவைக் கழித்து விட்டுக் காலையில் பஸ்ஸில் போகலாம் என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.
"ஆனா அவங்ககிட்ட நாம சாப்பிடலேன்னு சொன்னா, அவங்க நமக்காக ஏதாவது செய்வாங்க. அவங்களுக்கு எதுக்கு சிரமம் கொடுக்கணும்?" என்றான் ரகு.
"அவங்ககிட்ட நாம சாப்பிட்டுட்டோம்னு சொல்லிடலாம்" என்றாள் சுகந்தி.
"இன்னி ராத்திரி சாப்பிடாம இருந்துட வேண்டியதுதான். எனக்கு ஒண்ணும் கஷ்டம் இல்ல. உனக்குத்தான் கஷ்டம்" என்றான் ரகு.
"எனக்கென்ன சக்கரை வியாதியா இருக்கு? ஒரு வேளை சாப்பிடலேன்னா, ஒண்ணும் ஆயிடாது" என்றாள் சுகந்தி.
இருவரும் உறவினர் வீட்டை நோக்கி நடந்தபோது, வழியில் ஒரு கோவில் இருந்ததைப் பார்த்து, கோவிலுக்குப் போய் விட்டுப் போகலாம் என்று முடிவு செய்தார்கள்.
கோவிலில் போய் தரிசனம் செய்து வீட்டுக் கிளம்பும்போது, "ஒரு நிமிஷம் இருங்கோ" என்று அர்ச்சகர் அழைத்தார்.
"புளியோதரை, சக்கரைப் பொங்கல் பிரசாதம் இருக்கு. வெளியில நடக்கற கலாட்டாவினால, கோவிலுக்கு நிறைய பேர் வரல. பிரசாதம் நிறைய இருக்கு. நீங்க கொஞ்சம் எடுத்துக்கோங்கோ" என்று கையில் இலைகளுடனும், இரண்டு பிரசாதப் பாத்திரங்களுடனும் அவர்களை அழைத்தார் அர்ச்சகர்.
"இன்னி ராத்திரி சாப்பிடாம இருந்துட வேண்டியதுதான். எனக்கு ஒண்ணும் கஷ்டம் இல்ல. உனக்குத்தான் கஷ்டம்" என்றான் ரகு.
"எனக்கென்ன சக்கரை வியாதியா இருக்கு? ஒரு வேளை சாப்பிடலேன்னா, ஒண்ணும் ஆயிடாது" என்றாள் சுகந்தி.
இருவரும் உறவினர் வீட்டை நோக்கி நடந்தபோது, வழியில் ஒரு கோவில் இருந்ததைப் பார்த்து, கோவிலுக்குப் போய் விட்டுப் போகலாம் என்று முடிவு செய்தார்கள்.
கோவிலில் போய் தரிசனம் செய்து வீட்டுக் கிளம்பும்போது, "ஒரு நிமிஷம் இருங்கோ" என்று அர்ச்சகர் அழைத்தார்.
"புளியோதரை, சக்கரைப் பொங்கல் பிரசாதம் இருக்கு. வெளியில நடக்கற கலாட்டாவினால, கோவிலுக்கு நிறைய பேர் வரல. பிரசாதம் நிறைய இருக்கு. நீங்க கொஞ்சம் எடுத்துக்கோங்கோ" என்று கையில் இலைகளுடனும், இரண்டு பிரசாதப் பாத்திரங்களுடனும் அவர்களை அழைத்தார் அர்ச்சகர்.
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
பொருள்:
தான் உண்ணும் உணவைப் பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்னும் தீய நோய் தீண்டாது.
228. இரும்பு மனிதர்!
வறுமையான குடும்பத்தில் பிறந்து, படிப்பு இல்லாமல், பழைய இரும்பு சாமான்களை வாங்கி விற்கும் கடையில் தொழிலாளியாகச் சேர்ந்து, பிறகு தானே சிறிய அளவில் பழைய இரும்பு வியாபாரத்தை ஆரம்பித்து, முதலில் மெதுவாகவும், பிறகு வேகமாகவும் முன்னேறி, அந்தஸ்திலும், செல்வத்திலும் உயர்ந்த நிலைக்குப் போனவர் ஆறுமுகம்.
தன் கடந்த காலத்தைப் பற்றிப் பேசுவதில் அவருக்கு மிகவும் பெருமை உண்டு. மனைவி தொடங்கி, தொழில் விஷயமாக அவரைச் சந்திப்பவர்கள் வரை, அனைவரிடமும் தான் முன்னுக்கு வந்த கதையை அவர்களுக்கு அலுத்துப் போகும் வரை சொல்லிக் கொண்டிருப்பார்.
ஆனால், தன் உறவினர்களையோ, பழைய நண்பர்களையோ அவர் நெருங்க விடுவதில்லை. யாரும் தன்னிடம் உதவி கேட்டு விடுவார்களோ என்று பயம்.
நன்கொடை, கடன் என்று உதவி கேட்டு வருபவர்களையும் அவர் ஊக்குவிப்பதில்லை.
"நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சது எல்லாருக்கும் வாரிக் கொடுக்கவா?" என்பார் மனைவியிடம்.
"யாருக்காவது உதவி செஞ்சா, நாம என்ன குறைஞ்சா போயிடுவோம்? இரும்போட பழகிப் பழகி, உங்க மனசும் இரும்பாயிடுச்சு!" என்பாள் அவர் மனைவி கல்யாணி.
"ஆமாம். நான் இரும்பு மனுஷன்தான்!" என்பார் அவர்.
"மத்தவங்களுக்கு உதவி செய்யறதிலயும் ஒரு சந்தோஷம் இருக்கு. அதை நீங்களும் அனுபவிக்கப் போறதில்ல, உங்க மனைவியா இருக்கறதால, நானும் அனுபவிக்கப் போறதில்ல!" என்பாள் கல்யாணி.
"உங்களுக்கு இருக்கற வியாபாரம் போதாதா? புதுசா எதுக்கு ஒரு தொழில்ல இறங்கறீங்க?" என்றாள் கல்யாணி
"நான் வெறும் இரும்பு வியாபாரம்தான் பண்ணிக்கிட்டிருக்கேன்! இப்ப, இரும்பு தயாரிக்கப் போறேன். ஸ்டீல் ரோலிங் மில் ஆரம்பிக்கப் போறேன்!" என்றார் ஆறுமுகம்.
"உங்களுக்கு அதைப் பத்தி என்ன தெரியும்?"
"அதனாலதான், விஷயம் தெரிஞ்ச ஒத்தரோட சேந்து ஆரம்பிக்கறேன்."
"முன்பின் தெரியாதவங்களோட கூட்டு சேரப் போறதா சொல்றீங்க. யோசிச்சு செய்யுங்க" என்றாள் மனைவி.
"கூட்டுன்னா, வியாபாரத்தில கூட்டு இல்ல. பணம் நான் போடப் போறேன். அவர் மில்லை செட் பண்ணி ஓட வச்சுடுவாரு. அதுக்கப்பறம், லாபத்தில அவருக்குக் கொஞ்சம் பங்கு கொடுத்தா போதும்" என்றார் ஆறுமுகம்.
"என்னவோ செய்யுங்க!" என்றாள் மனைவி.
"எதுக்கு வீட்டை விக்கணுங்கறீங்க?" என்றாள் கல்யாணி.
"மெஷின் வாங்கறேன்னு சொல்லி, மட்டமான மெஷின்களை வாங்கி, பொய்யான பில்லையெல்லாம் கொடுத்து என்னை ஏமாத்திட்டு, எங்கேயோ ஓடிட்டான் அவன். வியாபாரத்தில போட்டிருந்த பணத்தையெல்லாம் எடுத்து அதில போட்டேன். இப்ப வியாபாரம் நடத்தக் கூடப் பணம் இல்ல. கடன் வேற வாங்கி இருக்கேன். வீட்டை வித்துக் கடனையெல்லாம் அடைச்சுட்டு, மீதி ஏதாவது இருந்தா, அதை வச்சுத்தான் குடும்பமே நடத்தணும் போலருக்கு" என்றார் ஆறுமுகம்.
தன் கடந்த காலத்தைப் பற்றிப் பேசுவதில் அவருக்கு மிகவும் பெருமை உண்டு. மனைவி தொடங்கி, தொழில் விஷயமாக அவரைச் சந்திப்பவர்கள் வரை, அனைவரிடமும் தான் முன்னுக்கு வந்த கதையை அவர்களுக்கு அலுத்துப் போகும் வரை சொல்லிக் கொண்டிருப்பார்.
ஆனால், தன் உறவினர்களையோ, பழைய நண்பர்களையோ அவர் நெருங்க விடுவதில்லை. யாரும் தன்னிடம் உதவி கேட்டு விடுவார்களோ என்று பயம்.
நன்கொடை, கடன் என்று உதவி கேட்டு வருபவர்களையும் அவர் ஊக்குவிப்பதில்லை.
"நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சது எல்லாருக்கும் வாரிக் கொடுக்கவா?" என்பார் மனைவியிடம்.
"யாருக்காவது உதவி செஞ்சா, நாம என்ன குறைஞ்சா போயிடுவோம்? இரும்போட பழகிப் பழகி, உங்க மனசும் இரும்பாயிடுச்சு!" என்பாள் அவர் மனைவி கல்யாணி.
"ஆமாம். நான் இரும்பு மனுஷன்தான்!" என்பார் அவர்.
"மத்தவங்களுக்கு உதவி செய்யறதிலயும் ஒரு சந்தோஷம் இருக்கு. அதை நீங்களும் அனுபவிக்கப் போறதில்ல, உங்க மனைவியா இருக்கறதால, நானும் அனுபவிக்கப் போறதில்ல!" என்பாள் கல்யாணி.
"உங்களுக்கு இருக்கற வியாபாரம் போதாதா? புதுசா எதுக்கு ஒரு தொழில்ல இறங்கறீங்க?" என்றாள் கல்யாணி
"நான் வெறும் இரும்பு வியாபாரம்தான் பண்ணிக்கிட்டிருக்கேன்! இப்ப, இரும்பு தயாரிக்கப் போறேன். ஸ்டீல் ரோலிங் மில் ஆரம்பிக்கப் போறேன்!" என்றார் ஆறுமுகம்.
"உங்களுக்கு அதைப் பத்தி என்ன தெரியும்?"
"அதனாலதான், விஷயம் தெரிஞ்ச ஒத்தரோட சேந்து ஆரம்பிக்கறேன்."
"முன்பின் தெரியாதவங்களோட கூட்டு சேரப் போறதா சொல்றீங்க. யோசிச்சு செய்யுங்க" என்றாள் மனைவி.
"கூட்டுன்னா, வியாபாரத்தில கூட்டு இல்ல. பணம் நான் போடப் போறேன். அவர் மில்லை செட் பண்ணி ஓட வச்சுடுவாரு. அதுக்கப்பறம், லாபத்தில அவருக்குக் கொஞ்சம் பங்கு கொடுத்தா போதும்" என்றார் ஆறுமுகம்.
"என்னவோ செய்யுங்க!" என்றாள் மனைவி.
"எதுக்கு வீட்டை விக்கணுங்கறீங்க?" என்றாள் கல்யாணி.
"மெஷின் வாங்கறேன்னு சொல்லி, மட்டமான மெஷின்களை வாங்கி, பொய்யான பில்லையெல்லாம் கொடுத்து என்னை ஏமாத்திட்டு, எங்கேயோ ஓடிட்டான் அவன். வியாபாரத்தில போட்டிருந்த பணத்தையெல்லாம் எடுத்து அதில போட்டேன். இப்ப வியாபாரம் நடத்தக் கூடப் பணம் இல்ல. கடன் வேற வாங்கி இருக்கேன். வீட்டை வித்துக் கடனையெல்லாம் அடைச்சுட்டு, மீதி ஏதாவது இருந்தா, அதை வச்சுத்தான் குடும்பமே நடத்தணும் போலருக்கு" என்றார் ஆறுமுகம்.
அழுகையை அடக்கிக் கொண்டு அவர் பேசியதால், அவர் குரல் கம்மி இருந்ததைக் கல்யாணி கவனித்தாள்.
குறள் 228
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
பொருள்:
தங்கள் பொருளை யாருக்கும் கொடுக்காமல் பாதுகாத்து வைத்து, ஒரு சந்தர்ப்பத்தில் அதை இழப்பவர்கள், பிறருக்குக் கொடுப்பதால் கிடைக்கும் இன்பத்தை அறிய மாட்டார்கள்.
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
பொருள்:
தங்கள் பொருளை யாருக்கும் கொடுக்காமல் பாதுகாத்து வைத்து, ஒரு சந்தர்ப்பத்தில் அதை இழப்பவர்கள், பிறருக்குக் கொடுப்பதால் கிடைக்கும் இன்பத்தை அறிய மாட்டார்கள்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
229. உதவி செய்யலாமா?
"சார்! புயல்ல நம்ப ஊர்ல ரொம்ப பேரு பாதிக்கப்பட்டிருக்காங்க. நிறைய பேருக்கு வீடு இல்ல, சாமான்கள் எல்லாம் போயிடுச்சு. சாப்பாட்டுக்குக் கூட வழியில்ல. நாம எல்லாம் சேந்துதான் அவங்களுக்கு உதவணும். நாங்க எல்லார்கிட்டயும், அரிசி, பணம், உடைகள் எல்லாம் கலெக்ட் பண்ணிக்கிட்டிருக்கோம். நீங்க ஏதாவது கொடுங்க சார்"
ஐந்தாறு பேர் பின் தொடர வந்த கதிர்வேலனைப் பார்த்த மகாலிங்கத்துக்கு எரிச்சல் வந்தது. 'இவங்களுக்கெல்லாம் வேற வேலை கிடையாது. என்னவோ ஊரையே இவங்கதான் காப்பாத்தறதா நினைப்பு!'
"அதான் அரசாங்கத்தில எல்லா உதவியும் செய்யறாங்களேப்பா!" என்றார் மகாலிங்கம்.
"அதெல்லாம் போதாது சார். ஏதோ ரெண்டு நாள் சாப்பாடு போட்டாங்க. மத்த உதவி எல்லாம் வரதுக்கு நாளாகும். அதுவரைக்கும் அவங்க உயிரோட இருக்க வேண்டாமா சார்?"
"எங்கிட்ட பணம் கிடையாதுப்பா. நானே கொஞ்ச நாளா வியாபாரம் சரியில்லாம முடங்கிப் போயிருக்கேன். இந்தப் புயலுக்கப்புறம், என் நிலைமை இன்னும் மோசமாப் போகும். நான் யாருக்கும் உதவற நிலையில இல்ல" என்றார் மகாலிங்கம்.
"கொஞ்சமாவது கொடுங்க சார்! பணம் இல்லாட்டாலும், அரிசி, துணிமணியாவது கொடுக்கலாமே!"
"ஏம்ப்பா! என் நிலத்தில விளைச்சல் இல்லாம, நானே கடையில அரிசி வாங்கி சாப்பிட்டுக்கிட்டிருக்கேன். ரெண்டு வேஷ்டியை மாத்தி மாத்திக் கட்டிக்கிட்டிருக்கேன். நான் என்னத்தைக் கொடுக்கறது?" என்றார் மகாலிங்கம்
"சரி சார்! பரவாயில்லை" என்று அவர்கள் போய் விட்டார்கள்.
அவர்கள் சென்றதும், அவர் மனைவி பார்வதி, "ஏங்க? நாம வசதியாத்தானே இருக்கோம்? கஷ்டப்படறவங்களுக்குக் கொஞ்சமாவது உதவியிருக்கலாமே!" என்றாள், குறைப்பட்டுக் கொள்ளும் குரலில்.
"இவ ஒத்தி! இருக்கறதைக் கொடுத்துட்டு, நாம என்ன பண்றது? இருக்கறதைப் பெருக்கப் பாப்பாங்களா, இல்ல, அள்ளிக் கொடுத்து அழிக்கப் பாப்பாங்களா?" என்றார் மகாலிங்கம்.
இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஒருநாள் அவர் வயலில் வேலை செய்யும் தண்டபாணி, தயங்கிக் கொண்டே அவர் அருகில் வந்து நின்றான்.
"என்னப்பா?" என்றார் மகாலிங்கம், கடன் எதுவும் கேட்கப் போகிறானோ என்ற பயத்துடன்.
"ஒண்ணுமில்லீங்க. வெள்ளத்தில என் வீடு கொஞ்சம் சேதமாயிடுச்சு..."
"அதான் அரசாங்கத்தில பணம் கொடுத்தாங்களே?"
"ஆமாங்க. ஐயாயிரம் ரூபா கொடுத்தாங்க."
"ஏன், அது பத்தலியாக்கும்? எங்கிட்ட பணம் இல்ல."
"அதான் அன்னிக்கு அவங்ககிட்ட சொன்னீங்களே, உங்களுக்கே பணக் கஷ்டம்னு."
"ஓ, அப்ப நீயும் இருந்தியா? தெரியுதுல்ல? அப்புறம் ஏன் எங்கிட்ட வந்து பணம் கேக்கற?"
"நீங்க தப்பா நினைச்சுக்கக் கூடாது. அரசாங்கத்தில் பணம் கொடுக்கறதுக்கு முன்னாடியே, நான் எங்கிட்ட இருந்த பணத்தைப் போட்டு வீட்டை ரிப்பேர் பண்ணிட்டேன். அரசாங்கம் கொடுத்த ஐயாயிரம் ரூபா நேத்திக்குத்தான் என் கைக்குக் கிடைச்சது. நீங்க தப்பா நினைக்கலேன்னா, நீங்க இதை வாங்கிக்கணும். உங்க பணக் கஷ்டம் தீர்ந்தப்பறம் திருப்பிக் கொடுங்க" என்றான் தண்டபாணி.
மகாலிங்கத்துக்கு உடல் பற்றி எரிவது போல் இருந்தது. உள்ளிருந்து பார்வதி மெதுவாகச் சிரித்த சத்தம், அந்த நெருப்புக்கு எண்ணெய் ஊற்றியது போல் இருந்தது.
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
பொருள்:
பிறருக்குக் கொடுத்தால் பொருள் குறைந்து விடுமே என்று நினைத்து, தம்மிடம் இருக்கும் பொருளைத் தாம் மட்டும் அனுபவிப்பது, பிறரிடம் யாசிப்பதை விடக் கொடுமையானதாகும்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
230. நண்பரின் மரணம்
மாசிலாமணி தயங்கியபடியே, "ஐயா, அது விஷயமாத்தான் உங்களைப் பாக்க வந்தேன்" என்றார்.
"சொல்லு."
"உங்ககிட்ட எப்படிக் கேக்கறதுன்னு தெரியல, உங்க நிலைமை முன்ன மாதிரி இல்லேன்னு தெரியும். ஆனா, எனக்கு உதவி செய்ய, இந்த ஊர்ல உங்களைத் தவிர வேற யாரும் இல்ல."
"சொல்லு, மாசிலாமணி. எங்கிட்ட என்ன தயக்கம்?"
"கல்யாணத்துக்குப் பணம் கொஞ்சம் குறையுது. ஒரு அம்பதாயிரம் கொடுத்து உதவினீங்கன்னா, அறுவடை ஆனதும் வட்டியோட திருப்பிக் கொடுத்துடுவேன்."
"என்னது வட்டியோடயா?"
"தப்பா நினைச்சுக்காதீங்கய்யா. நீங்க எங்கேயாவது புரட்டிக் கொடுக்கறதா இருந்தா, வட்டி கொடுக்க வேண்டி இருக்குமே!"
"ஆக, எங்கிட்ட பணம் இல்லே, நான் யார்கிட்டயாவது வாங்கித்தான் கொடுக்கணும்னு சொல்ற!"
"ஐயா, என்னங்க இது? உங்க பழைய நிலைமையை நினைச்சுப் பாத்து, நான் வருத்தப்படாத நாளே இல்ல."
"எனக்குத் தெரியாதா உன்னைப் பத்தி? ஏற்பாடு செய்யறேன். ரெண்டு நாள் கழிச்சு வா" என்றார் பெரியசாமி.
பெரியசாமி ஒரு காலத்தில் நிறைய நிலம் வைத்திருந்தபோது, அவர் நிலங்களை மாசிலாமணி குத்தகை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
"கல்யாணத்துக்குப் பணம் கொஞ்சம் குறையுது. ஒரு அம்பதாயிரம் கொடுத்து உதவினீங்கன்னா, அறுவடை ஆனதும் வட்டியோட திருப்பிக் கொடுத்துடுவேன்."
"என்னது வட்டியோடயா?"
"தப்பா நினைச்சுக்காதீங்கய்யா. நீங்க எங்கேயாவது புரட்டிக் கொடுக்கறதா இருந்தா, வட்டி கொடுக்க வேண்டி இருக்குமே!"
"ஆக, எங்கிட்ட பணம் இல்லே, நான் யார்கிட்டயாவது வாங்கித்தான் கொடுக்கணும்னு சொல்ற!"
"ஐயா, என்னங்க இது? உங்க பழைய நிலைமையை நினைச்சுப் பாத்து, நான் வருத்தப்படாத நாளே இல்ல."
"எனக்குத் தெரியாதா உன்னைப் பத்தி? ஏற்பாடு செய்யறேன். ரெண்டு நாள் கழிச்சு வா" என்றார் பெரியசாமி.
பெரியசாமி ஒரு காலத்தில் நிறைய நிலம் வைத்திருந்தபோது, அவர் நிலங்களை மாசிலாமணி குத்தகை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆனால், காலப்போக்கில் மனைவிக்கு வைத்தியம், மகன் மகள் படிப்பு, அப்புறம் மகள் கல்யாணம் என்று தெடர்ந்து வந்த செலவுகளுக்காக, சிறிது சிறிதாக நிலங்களை விற்று, இப்போது மிக நலிந்த நிலைக்கு வந்து விட்டார் பெரியசாமி.
ஆயினும், பெரியசாமியால் தனக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கையில் மாசிலாமணி அவரிடம் வந்து கடன் கேட்டிருக்கிறார்.
"என்னங்க, என்னதான் உங்க நெருங்கின நண்பர்னாலும், அவர் போய்ப் பத்து நாள் ஆனப்பறம் கூட, இப்படி இடிஞ்சு போய் உக்காந்திருக்கீங்களே! மனுஷங்கன்னா ஒரு நாள் போய்த்தானே ஆகணும்?" என்றாள் பெரியசாமியின் மனைவி வள்ளி.
பெரியசாமி மெதுவாகத் தலையை உயர்த்தி மனைவியைப் பார்த்து விட்டு, வேறு புறம் பார்வையைத் திருப்பினார்.
தன் நண்பர் வேலாயுதம் திடீரென்று இறந்து போனது பெரியசாமிக்கு அதிர்ச்சிதான். மாசிலாமணிக்குக் கடன் கொடுக்க, அவர் வேலாயுதத்திடம் பணம் கேட்டு, அவரும் தருவதாகச் சொல்லி இருந்தார். ஆனால், பணம் தருவதற்குள் வேலாயுதம் இறந்து விட்டார்.
தன் நண்பர் வேலாயுதம் இறந்து விட்ட துயரத்தை விட, தன்னால் மாசிலாமணிக்கு உதவ முடியாமல் போனதுதான் பெரியசாமிக்கு அதிகத் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது வள்ளிக்குத் தெரியாது.
"என்னங்க, என்னதான் உங்க நெருங்கின நண்பர்னாலும், அவர் போய்ப் பத்து நாள் ஆனப்பறம் கூட, இப்படி இடிஞ்சு போய் உக்காந்திருக்கீங்களே! மனுஷங்கன்னா ஒரு நாள் போய்த்தானே ஆகணும்?" என்றாள் பெரியசாமியின் மனைவி வள்ளி.
பெரியசாமி மெதுவாகத் தலையை உயர்த்தி மனைவியைப் பார்த்து விட்டு, வேறு புறம் பார்வையைத் திருப்பினார்.
தன் நண்பர் வேலாயுதம் திடீரென்று இறந்து போனது பெரியசாமிக்கு அதிர்ச்சிதான். மாசிலாமணிக்குக் கடன் கொடுக்க, அவர் வேலாயுதத்திடம் பணம் கேட்டு, அவரும் தருவதாகச் சொல்லி இருந்தார். ஆனால், பணம் தருவதற்குள் வேலாயுதம் இறந்து விட்டார்.
தன் நண்பர் வேலாயுதம் இறந்து விட்ட துயரத்தை விட, தன்னால் மாசிலாமணிக்கு உதவ முடியாமல் போனதுதான் பெரியசாமிக்கு அதிகத் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது வள்ளிக்குத் தெரியாது.
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை
பொருள்:
மரணத்தை விடத் துன்பமானது எதுவும் இல்லை. ஆனால், நம்மிடம் யாசித்தவருக்கு நம்மால் எதுவும் கொடுக்க முடியாத நிலையுடன் ஒப்பிட்டால், மரணமே இனிமையானதாகத் தோன்றும்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment